நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ : அத்தியாயம் நான்கு: நல்லூர் கந்தசாமி கோயில்!
நல்லூர் இராஜதானியில் அமைந்திருந்த ஏனைய பகுதிகளைப் பற்றி நூல்கள் கூறுவதைச் சிறிது பார்ப்போம். நல்லூர் இராஜதானியின் முக்கிய அம்சங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசாமி கோயிலைப் பற்றிய பல முரண்பாடான தகவல்கள் சரித்திர நூல்களில் காணப்படுகின்றன. கைலாயமாலையில் வரும் பின்வரும் பாடலே சர்ச்சைக்குக் காரணம். ‘ ..இலக்கிய சகாப்த மெண்ணூர், றெழுபதா மாண்ட தெல்லை,அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகவாகு,நலமிகும் யாழ்ப்பாண நகரி,கட்டுவித்து நல்லைக்,குலவிய கந்தவேட்குக், கோயிலும் புரிவித்தானே.. ‘இப்பாடலில் வரும் எண்ணூற்றெழுபதை சுவாமி ஞானப்பிரகாசர், வ.குமாரசாமி போன்றவர்கள் கி.பி.1248 ம் ண்டைக் குறிக்குமெனக் கருதுவார்கள். மேற்படி பாடலில் உள்ள எண் என்பது யிரத்தைக் குறிக்குமெனவும் யிரத்துடன் நூற்றெழுபதைக் கூட்ட வருவது சகவருடம் 1170 என்பதும் இது கி.பி.1248ஐக் குறிக்கும் என்பதும் இவர்களது கருத்து. டானியல் ஜோன் என்பவரின் கருத்துப்படி சகவருடம் எண்ணூறெழுபது என்பது கி.பி.948ஐக் குறிக்கும் என்பதாகும். முதலியார் இராசநாயகத்தின் கருத்துப்படியும் சகவருடம் 870 என்பது கி.பி.948ஐக் குறிக்கும். இதில் வரும் புவனேகபாகுவை ரிய மன்னனின் மந்திரியாகவும், நல்லைக் கோயிலைக் கட்டியவனாகவும் கைலாயமாலை, யாழ்ப்பாணவைபவமாலை போன்ற நூல்களில் குறிக்கப்பட்டுள்ளன. னால் நல்லூர்க் கோயில் கட்டியத்தில் அதனைக் கட்டியவன் சிறிசங்கபோதி புவனேகபாகு எனக் குறிப்பிடப் பட்டிருப்பதை மறைத்து விட முடியாது. இந்தச் சிறிசங்கபோதி புவனேகபாகு என்பவனே கி.பி.1450இலிருந்து கி.பி.1467வரை நல்லூரை இராசதானியாக்கி அதிலிருந்து அரசாண்ட சப்புமல்குமாரய என்பவனாவான். கந்தையா குணராசாவின் கருத்துப்படி இந்த இரண்டு புவனேகபாகுகளையும் உண்மைகளாகக் கொண்டு அதற்கொரு விளக்கம் காணப்படிருப்பதை அறியக் கூடியதாகவுள்ளது. முதல் புவனேகபாகுவை இவர் ஒரு தமிழ்ப் பெயராகவே முடிவு செய்கின்றார்.
‘..நல்லூர் கந்தசாமி கோயிலைக் கட்டியவர் புவனேகவாகு (தமிழ்ப் பெயர் வீரவாகு போல) என்பதற்கு வேறிரு தாரங்களுமுள்ளன.. ‘ (வீரகேசரி 15-08-1993).
‘எவ்வாறாயினும் கி.பி.948ம் ண்டில் புவனேகவாகு என்பவரால் முதன் முதலில் நல்லூர்க் கந்தசாமி கோயில் கட்டப்பட்டது எனக் கொள்ளலாம். இவரை ஓர் அமைச்சரென வரலாற்று நூல்கள் சில குறிப்பதால் சோழ அரசனின் அரசப் பிரதிநி அல்லது அமைச்சர் அவர் எனக் கொள்வதில் தவறில்லை ‘ (வீரகேசரி; 15-08-1993) என்ற முடிவுக்கு வந்தபின் க.குணராசாவினால் இரண்டு புவனேகபாகுவுகளுக்கு இடையில் சமரசம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதன்படி இருவேறு புவனேகபாகுவுகளால் இருவேறு காலங்களில் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தன் லயம் போர்த்துக்கேயரால் இடிக்கப்பட்டு மூன்றாவது முறையாகக் கட்டப்பட்டது என்ற முடிவுக்கே இறுதியாக இவரால் வர முடிகிறது. இவரால் குறிப்பிடப்படுகின்ற வரலாற்று நூல்கள் உண்மையில் யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை போன்றவையே. இந்நூல்களில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகள் பல வரலாற்று நெறியின்றி அமைந்துள்ளன என்பது முதலியார் இராசநாயகமுட்படப் பல வரலாற்றாய்வாளர்களின் முடிவாகும். இந்தப் பிரச்சனையில் முதலியார் இராநாயகத்தின் முடிவே தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.
‘..புவனேகபாகு முதலரசனாகிய செகராசனுடைய மந்திரியெனக் கைலயாயமாலையும், அவனே நல்லூர்க் கந்தசாமி கோயிலைக் கட்டினானென வைபவமாலையும் கூறும். னால் புவனேகபாகு நல்லூர்க் கந்தசாமி கோயிலைக் கட்டினானென்னும் கேள்வி வழக்குவரை உண்மையாகலாம். கேள்விப்பட்ட கைலயாயமாலையார் நூலெழுத முன்னூறு வருடங்களுக்குள் வாழ்ந்த புவனேகபாகுவை இன்னாரென அறிய முடியாமலோ, அன்றிச் சிங்களவரென்பதை மறைத்து விட வேண்டுமெனக் கருதியோ, யாதினாலோ அவனை செகராசனுடைய மந்திரியென அலங்கரித்து விட்டார். நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கட்டியத்தில் ஸ்ரீசங்கபோதி புவனேகபாகு எனப் புகழ்ந்து கூறுவது கேட்கப்படுவதால் அதனை மறைக்க எவராலும் முடியாது. ‘ (யாழ்ப்பாணச் சரித்திரம்: பக்கம் 252).
இது இவ்வாறில்லாமல் கந்தையா குணராசா கூறுவது போல இரு புவனேகபாகுகளால் இருவேறு காலங்களில் நல்லூர் முருகன் கோயில் கட்டப்பட்டது உண்மையாயிருந்தால் அது ஆச்சரியமானது. ஏனெனில் இருவருக்கும் புவனேகபாகு என்ற ஒரே பெயர் ஏற்பட்டது (அதுவும் இருவேறு இனங்களைச் சேர்ந்த) சாதாரணமாக ஏற்படக் கூடிய நிகழ்வல்ல. அதற்கான சாத்தியம் அரிதானதே
by Thiruthanigesan Kanagasabai
The site is incredible. Well organised and with ve...
hi,I like to get full day of festival video cd.how...
Respected sir, Vanakkam. Myself Muthukumar Subram...
I ,as a man , I have not seen or rather experience...
Namaste, I have been looking on the web for the m...
could you please help me to view festival vedios ...
very good information...
...