நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவ திருவிழா 2013 இன் கொடியேற்ற திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாகவும் மிகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
பிள்ளையார் வேலவன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் அழகிய சிவப்பு செய்வரத்தம் பூவினால் கட்டப்பட்ட மாலைகளின் நடுவில் அமர்ந்து தமது வெள்ளி வாகனங்களில் ஏறி கொடியேற்றும் நிகழ்விற்காக சரியாக 09.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கடல் போல் குஊடியிருந்த அடியவர்களின் மத்தியில் மிதர்ந்து வந்து கொடி தம்பத்தை அடைந்தனர். பின்னர் சிவாச்சாரியர்கள் தமது வேத பாரயனங்கலால் எம் முருகனுக்கு உரு வேற்றினார்கள் . அதனை தொடர்து சரியாக காலை 10:00 மணிக்கு மங்கள வார்தியங்கள் முழங்க நல்லூர் கந்தனின் பிரமாண்டமான பஞ்ச மணிகளும் இசை எழுப்ப பகதர்களின் அரோகரா முருகா என்ற உண்மையான நாமம் வானை பிளக்க 2013 ஆம் ஆண்டின் மகோற்சவம் மிகவும் சிறப்பாக ஆரம்பம் ஆகியது. பின்னர் பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை ஆகிய மூன்று தெய்வங்களும் விசேட தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் மங்கள இசையுடன் உள்ளே உலா வந்து பின்னர் மூன்று தெய்வங்களும் தங்களது இருப்பிடத்துக்கு சென்றனர். அத்துடன் கொடியேற்ற திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது.
வழமை போல இம் முறையும் ஆலையத்தை சுற்றியுள்ள மண்டபங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் பெரும் எண்ணிக்கையான அடியவர்கள் அதிகாலை தொடக்கம் தமது நேர்த்திகளை செய்துகொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.
க.தினேஷ்கரன்
The site is incredible. Well organised and with ve...
hi,I like to get full day of festival video cd.how...
Respected sir, Vanakkam. Myself Muthukumar Subram...
I ,as a man , I have not seen or rather experience...
Namaste, I have been looking on the web for the m...
could you please help me to view festival vedios ...
very good information...
...