Articles

மாங்கனி பெற்ற மங்கையின் காட்சி கண்டேன்.

மழலைகள் வேண்டி மக்கள் நல்லூர் மாதலத்தில் தவமிருப்பர்
மாங்கனிக்காய் உலகளந்த மாமயிலோன் கோவிலிலே
மாமயிலோன் முருகன் சூரன் மாமரத்தை பிளக்கும் வேளை
மாங்கனியாய் சொரிகின்ற மாகனியை பெற்று மங்கை
தேன் சுவை போல் உண்டு திருவருளை முருகனிடம்
தித்திக்க பெற்ற அற்புதத் திருவருளை கண்டுகொண்டேன
தவமிருந்து பெற்றெடுத்த தவக்கொழந்தை கோயிலிலே
தரை மேல் கிடத்திவிட்டு மங்கை தானும் வணங்கிடுவாள்
ஆனந்தக் கண்ணீரால் அபிசேகம் செய்வதுபோல்
அன்பான காட்சி எல்லாம் ஆலயத்தில் கண்டு கொண்டேன்.

 

 

 

 

 

 

 

நல்லூர்.தர்மன்.


Leave a Comment