Videos

ஆர்த்திடும் மணிகளின் ஓசையெழும் நல்லை நகர் கார்த்திகை வேலவர்க்கு இன்று 17 ஆம் திருவிழா
அதன் காலைக்காட்சிகள்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 17ஆம் நாள் உற்ஸவம் இன்றாகும்.இன்று மாலை கார்த்திகை திருவிழா

பூத்திருக்கும் விழியில் உந்தன் ஆறுமுகம் தெரியுது ஐயா
ஆர்த்தஅலை சேரும் அந்த சரவணை யாம் பொய்கையிலே
கார்த்திகைமா தர் அறுவர் ஓருருவாய் ஆக்கி னரே
சீர்பூத்தநல்லை நகர் சிறந்திடு உற்ஸவம் கார்த்திகை இன்றல்லோ

”தரணி யெலாம் காத்தனை போற்றி போற்றி எம் வாழ் நாள் முதலாகிய தெய்வமே நல்லை நகர் கந்தரே போற்றி போற்றி”


Leave a Comment