Articles

தேவஸதானத்தினரால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு:
தனி மனித இடைவெளியைப் பேணியும், முகக் கவசங்கள் அணிந்தும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிக் கொள்ளுங்கள்.
எம் பெருமானின் இரதோற்சவ தினத்தன்று அதிகாலை முதல் மதியம் 2 மணி வரை சண்முகப் பெருமானைத் தாராளமாகத் தரிசிக்கலாம்.
எனவே, அடியவர்கள் தயவு செய்து சிறு குழந்தைகளையும், வயதானவர்களையும் கோவிலுக்கு அழைத்து வருவதைத் தவிருங்கள். அவர்கள் வீட்டில் இருந்தவாறே எம் பெருமானைத் தியானத்தில் தரிசனம் செய்யுங்கள்.
ஒரே நேரத்தில் அனைவரும் ஒன்று கூடாமல், வெவ்வேறு நேரங்களில் கோவிலுக்கு வருகை தந்து சண்முகப் பெருமான் - ஆனந்தக்கூத்தன் தரிசனங் கண்டு, அவன் குஞ்சிதபாத சேவை கண்டு இக, பர சௌபாக்கியம் அடைவீர்களாக!
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, நல்லூர் ஆலயப் பணியாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்.
நல்லூர்க் கந்தப் பெருமானுடைய அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
Tags:

Leave a Comment